தமிழ் திரையுலகின் நட்சத்திர கதாநாயகனாக இருந்த சத்யராஜ் இப்போது முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்த சத்தியராஜ் இப்போது தெலுங்கு படமொன்றில் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
கம்பீரமான கட்டப்பா

தெலுங்கு திரையுலகின் பிரமாண்ட படைப்பாளர் எஸ் எஸ் ராஜமௌலி. இவரின் பாகுபலி திரைப்படத்தில் கம்பீரமான கட்டப்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து தெலுங்கு மக்களின் மனங்களிலும் இடம்பிடித்தவர் சத்யராஜ். கட்டப்பா பாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து இப்போது அவருக்கு தெலுங்கு திரை உலகிலும் வாய்ப்புகள் குவிகின்றன. முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் நடிப்பதன் மூலம் தெலுங்கிலும் சத்யராஜ்க்கு பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது.
சிவகார்த்திகேயனுடன் ஒன்ஸ்மோர்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்திகேயனோடு சேர்ந்து நடித்திருந்த சத்யராஜ் மீண்டும் அவரோடு தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் ‘ஜாதி ரத்னாலு’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் அனுதீப் இப்படத்தை இயக்குகிறார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் இப்படத்திற்கு தற்காலிகமாக SK20 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் காம்போவில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் பெரிய வெற்றிபெற்றதை தொடர்ந்து SK20 படம் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பிரபாஸின் ராதேஷ்யாம் பட விழாவில் SK20 ல் தனது கதாபாத்திரம் பற்றி பேசிய சத்யராஜ், என்னோட கதாபாத்திரம் அனைவருக்கும் சர்ப்பிரைஸ்சாக இருக்கும். இதுவரை நான் நடித்திராத கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

