நெல்லை தச்சநல்லூர் பைபாஸ் ரோட்டில் இளைஞர் வெட்டி கொலை. உறவினர்கள் சாலை மாறியலால் போக்குவரத்து பாதித்துள்ளது.
வெட்டி கொலை
நெல்லை தச்சநல்லூர் அருகே பால் கட்டளையைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பேச்சிராஜ்ன் ஐடிஐ (26). கட்டிட தொழிலாளியான இவருக்கு வெள்ளத்தாய் (19) என்ற மனைவியும் 3 மாத கைக்குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை பேச்சிராஜ் தச்சநல்லூர் பைபாஸ் ரோட்டின் அருகே உள்ள சாய்பாபா கோயில் முன்பு உறவினர் ஒருவருடன் பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது, மற்றொரு பைக்கில் வந்த மூன்று பேரை கொண்ட கும்பல் பெட்சிராஜனை வழிமறித்து வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். சம்பவ இடத்திலே பேச்சிராஜன் ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தச்சநல்லூர் காவல்துறையினர் உடலை மீது திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செய்தி அறிந்த குடுபத்தினர் மற்றும் உறவினர்கள் பைபாஸ் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல் ஆணையர் அவினாஷ்குமார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளிகள் உடனே கைது செய்யப்படுவார்கள் என்று கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இறந்தவர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு, அரசு வேலை வழங்கவேண்டும், கொலையாளிகளை குண்டர் சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். சாலை மாறியலால் அங்கு வெகு நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

