இந்தியாவில் மொத்த மக்கள்தொகையில் 7.3 சதவீதம் பேர் கையில் டிஜிட்டல் பணம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணபரிவர்தனை
ஐ. நா சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு, கடந்த ஆண்டு உலக அளவில் அதிகமாக டிஜிட்டல் பணம் பயன்படுத்துபவர்களை கொண்ட நாடுகளை தரவரிசைப்படுத்தி உள்ளது. முதல் 20 இடங்களை பிடித்த நாடுகளை பட்டியலிட்டுள்ளது. அதில், முதலிடத்தில் உக்ரைன் உள்ளது. அங்கு 12.7 சதவீதம் பேரிடம் டிஜிட்டல் முறையில் பணத்தை செலவிடுவதாக தெரிவித்துள்ளது. அதேபோன்று ரஷியா, வெனிசுலா, சிங்கப்பூர், கென்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இந்நிலையில், இந்தியாவில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 7.3 சதவீதம் பேரிடம் கடந்த ஆண்டு டிஜிட்டல் பணபரிவர்தனை முறையை பயன்படுத்தியுள்ளன. பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2019 ஆண்டு கொரோனா காலகட்டத்தில், வளரும் நாடுகள் உள்பட உலகம் முழுவதும் டிஜிட்டல் பணத்தின் பயன்பாடு அதிகரித்து இருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

