நாளை நடைபெற உள்ள டின்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் கடந்த ஆண்டுகளை விட அதிகளவில் தேர்வர்கள் பங்கேற்கிறார்கள்.
அரசு தேர்வு
தமிழக அரசின் பல துறைகளில் பணியாற்ற டின்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2A மற்றும் குரூப் 4 போன்ற தேர்வுகளின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர். அதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் நாளை நடைபெற இருக்கிறது குரூப் 2 தேர்வு. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் எந்த அரசு தேர்வுகளும் நடைபெறவில்லை.

டின்பிஎஸ்சி குரூப் 2
இந்நிலையில், நாளை டின்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வு நடைபெறவுள்ளது. இதில் தமிழக முழுவதும் 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 ஆண்களும், 6 லட்சத்து 81 ஆயிரத்து 880 பெண்களும் மற்றும் 48 ஆயிரம் மூன்றாம் பாலினத்தினரும் தேர்வு எழுத எழுதுகின்றனர்.

தேர்வு மதிப்பெண்
மேலும், 38 மாவட்டங்களில் உள்ள 117 மையங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 846 பேர் தேர்வு எழுதிகிறார்கள். குறைந்தபட்சமாக நீலகிரியில் 5,000 பேர் தேர்வு எழுத இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 200 கேள்விகள் கேட்கப்படும் அதில் 90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்கள் தான் தேர்வில் வெற்றி பெற முடியும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்த தேர்வில் ஆங்கில வழியில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 586 பேரும், தமிழ் பிரிவில் 9 லட்சத்து 46 ஆயிரத்து 589 பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
பாலசந்திரன் பேச்சு
தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அலுவலகத்தின் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் காலை 8.59 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறினார். மேலும், ஹால்டிக்கெட் கலர் அல்லது கருப்பு வெள்ளை நகலை கொண்டு வரலாம் என்றும் ஏதோவொரு அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும் என்று பாலசந்திரன் தெரிவித்தார்.

