Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஃபிட்னஸ்»எதுக்கெடுத்தாலும் கோபப்படுபவரா நீங்கள்? உங்கள் இதயம் ஆபத்தில் இருக்கலாம் – அதிர்ச்சி தரும் ஆய்வு!

எதுக்கெடுத்தாலும் கோபப்படுபவரா நீங்கள்? உங்கள் இதயம் ஆபத்தில் இருக்கலாம் – அதிர்ச்சி தரும் ஆய்வு!

February 24, 20263 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வாழ்க்கையில் ஒருமுறை கூட கோபப்படாத மனிதர்களே இருக்க முடியாது. போக்குவரத்து நெரிசல், அலுவலக வேலைப்பளு, வீட்டில் ஏற்படும் சின்ன சின்ன வாக்குவாதங்கள் என ஏதாவது ஒரு சூழலில் நாம் அனைவரும் நிதானத்தை இழக்கிறோம். ஆனால், இந்த “கோபம்” உங்கள் இதயத்தை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதை எப்போதாவது யோசித்தது உண்டா?

சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் கோபத்திற்கும் இதய நலத்திற்கும் இடையே உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பை வெளிகொண்டுவந்துள்ளது. இந்த ஆய்வு frequent anger to increased risk of heart disease என்ற தலைப்பில் NIH ஆய்வுத்தளத்தில் வெளியாகியுள்ளது.

நாம் சாதாரணமாக கடந்து செல்லும் ஆத்திரம், உண்மையில் நம் உடலுக்குள் ஒரு போராட்டத்தையே நடத்துகிறது என்கிறது ஆய்வு. இது வெறும் மனநிலை மாற்றம் மட்டுமல்ல, உங்கள் ரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மையை குறைத்து, மாரடைப்புக்கான வாய்ப்பை அமைதியாக உருவாக்குகிறது.

நாம் அன்றாடம் சந்திக்கும் மன அழுத்தமும், சட்டென்று வெடிக்கும் கோபமும் நம் ஆயுளை எப்படிக் குறைக்கின்றன என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். அமெரிக்காவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள், 280 ஆரோக்கியமான இளைஞர்களை வைத்து ஒரு முக்கியமான ஆய்வை மேற்கொண்டனர். இவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற எந்தப் பாதிப்பும் இல்லை. இவர்களை நான்கு குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவையும் ஒரு குறிப்பிட்ட உணர்வை வெளிப்படுத்தச் சொன்னார்கள்.

8 நிமிட கோபம்! ஒரு குழுவிடம் தங்களுக்கு மிகவும் கோபம் வந்த பழைய நினைவுகளை 8 நிமிடங்கள் அசைபோட சொன்னார்கள். மற்ற குழுக்களிடம் கவலை, சோகம் போன்ற நினைவுகளைப் பகிரச் சொன்னார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், சோகமாக இருந்தவர்களையோ அல்லது சாதாரணமாக இருந்தவர்களையோ விட, கோபப்பட்டவர்களின் உடலில் தான் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது. அந்த எட்டு நிமிட கோபம் அவர்களின் ரத்த நாளங்களின் செயல்பாட்டை பாதியாக குறைத்துவிட்டது.

இதையும் படிக்க :  இந்தியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

பொதுவாக நமது ரத்த நாளங்கள் ரத்த ஓட்டத்திற்கு ஏற்ப விரிவடைந்து சுருங்கும் தன்மை கொண்டவை. இதனை ‘எண்டோதீலியம்’ செயல்பாடு என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். நாம் கோபப்படும்போது உடலில் ‘கார்டிசோல்’ மற்றும் ‘அட்ரினலின்’ போன்ற அழுத்த ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் ரத்த நாளங்களின் உட்பகுதியை இறுக்கமடைய செய்கின்றன.

இதனால் ரத்த நாளங்கள் விரிவடைய முடியாமல் போகிறது. இந்த ஆய்வு முடிவுகளின்படி, கோபம் தணிந்த பிறகும் கூட, ரத்த நாளங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப சுமார் 40 நிமிடங்கள் ஆகின்றன. அதாவது, நீங்கள் எட்டு நிமிடம் காட்டும் ஆத்திரம், உங்கள் இதயத்தை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை போராட்டத்திலேயே வைத்திருக்கிறது.

இதயத்துக்கு எதிரி கோபம் தான்: நமக்கு கவலை அல்லது சோகம் ஏற்படும்போதும் மன அழுத்தம் உண்டாகிறது தான். ஆனால், இந்த ஆய்வில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சோகமும் கவலையும் ரத்த நாளங்களை கோபத்தை போல மோசமாக பாதிப்பதில்லை. கோபம் மட்டுமே நேரடியாக ரத்த நாளங்களின் விரிவடையும் திறனை பாதிக்கிறது.

இதையும் படிக்க :  கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய உணவுகள் !

ஒருமுறை கோபப்படுவதால் உடனே மாரடைப்பு வந்துவிடாது என்றாலும், அடிக்கடி கோபப்படுபவர்களின் ரத்த நாளங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப நேரமில்லாமல் போகிறது. இது நாளடைவில் ரத்த நாளங்களில் அடைப்புகளை (Plaque) உண்டாக்கி, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கிறது. குறிப்பாக ஏற்கனவே இதய கோளாறு உள்ளவர்கள் கோபப்படும்போது, அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதற்கு இதுதான் காரணம்.

இந்த சூழலை நம் அன்றாட வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்தால், நாம் எவ்வளவு ஆபத்தில் இருக்கிறோம் என்பது புரியும். உதாரணமாக, அலுவலகத்தில் மேல் அதிகாரி திட்டும்போதோ அல்லது சாலையில் யாராவது குறுக்கே வரும்போதோ நாம் காட்டும் உடனடி கோபம் நம் உடலுக்குள் ஒரு மெதுவான நஞ்சாக மாறுகிறது.

இதய ஆரோக்கியம் என்பது வெறும் உடற்பயிற்சி மற்றும் உணவோடு முடிந்துவிடுவதில்லை, அது நம் மனநிலையைப் பொறுத்தும் அமைகிறது. அடிக்கடி கோபப்படுவதை தவிர்ப்பதன் மூலம், இதய நோய் வருவதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளை தடுத்து நிறுத்த முடியும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

கோபம் வரும் சூழலில் உடனே எதிர்வினையாற்றாமல், ஆழமாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக விடுவது அல்லது அந்த இடத்தை விட்டு சற்று விலகி செல்வது போன்ற எளிய பழக்கங்கள் உங்கள் ரத்த நாளங்களை இறுக்கமடையாமல் பாதுகாக்கும். நடைப்பயிற்சி மற்றும் யோகா போன்ற எளிய உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைத்து, ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்க உதவும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“அரசியலமைப்பை பின்பற்றாமல் எனக்கு எதிராக யூனுஸ் சதி செய்தார்” – வங்கதேச அதிபர்
Next Article சிறுமியின் உயிரை பறித்த பேன் தொல்லை! அலட்சியம் வேண்டாம் பெற்றோர்களே!

Related Posts

உணவு

கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட ‘கருப்பு கேரட்’ ; குன்னூரில் சோதனை வெற்றி

March 31, 2026
ஃபிட்னஸ்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கனுமா? இந்த 6 ‘சூப்பர் ஃபுட்ஸ்’ கொடுங்க!

March 31, 2026
ஃபிட்னஸ்

காலை Vs மாலை: இதய ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?

March 26, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.