Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»தேனியில் ஃபைனான்சியர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு- தலைமறைவான முக்கிய குற்றவாளிகளுக்கு வலைவீச்சு

தேனியில் ஃபைனான்சியர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு- தலைமறைவான முக்கிய குற்றவாளிகளுக்கு வலைவீச்சு

February 5, 20262 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வட்டிக்கு பணம் வாங்கியவரின் வீட்டை எழுதி வாங்கியதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஃபைனான்சியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேனி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள கோட்டைகளம் தெருவில் வசித்து வந்தவர் பாண்டியன் என்ற பழக்கடை பாண்டி (71). இவருக்கு வசந்தா என்ற மனைவியும், இரண்டு மகள், மற்றும் ஒரு மகன் உள்ளனர். பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசிக்கும் நிலையில், மனைவி வசந்தா உடன் தனியே வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

பாண்டியனுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பதே பிரதான தொழில். இந்நிலையில் கடந்த திங்களன்று காலை அவரது வீட்டில் இருந்து வெளியே வந்த பாண்டியனை வாசலில் வைத்தே மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேனி காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனது கணவர் கொலை வழக்கில் சிலர் மீது சந்தேகம் இருப்பதாக பாண்டியன் மனைவி வசந்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த வனிதா என்பவருக்கு தனது கணவர் பாண்டியன் பணம் கொடுத்து, அதனை அவர் திரும்பதராததால் அதற்கு ஈடாக அவரது வீட்டை கிரையம் செய்து கொண்டார். எனவே வனிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சந்தேகம் இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  ராமநாதபுரத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் !

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர், சந்தேகப்படும் நபர்கள் அனைவரும் தலைமறைவாக இருந்ததை தொடர்ந்து, அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் அல்லிநகரம் வீரப்ப ஐயனார் மலைக்கோயிலுக்கு செல்லும் பகுதியில் உள்ள தோட்டப்பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்று குற்றம்சாட்டப்பட்ட நபர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அல்லிநகரம் வனிதா என்பவர் அவரது மகள் திருமணத்திற்காக கடந்த 2015ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள தனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து பாண்டியனிடம் 3.5 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும், அதற்கு பாண்டியன் வட்டிக்கு வட்டி என பத்து வருடங்கள் கழித்து ரூ.15 லட்சம் பணம் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இதில் ரூ.13 லட்சம் பணம் கொடுத்த பின்பும், நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று வீட்டை கிரையம் முடித்து அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், வீட்டு பெண்களை பாண்டியன் தவறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வனிதாவின் சகோதரர்கள் கர்ணன் மற்றும் பிரபாகரன் பாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டு, பத்து நாட்களுக்கு மேலாக அவரது தினசரி நடவடிக்கைகளை மறைந்திருந்து நோட்டமிட்டனர்.

இதையும் படிக்க :  436 ரூபாய் செலுத்தினால் - ஆண்டிற்கு 2 லட்சமா !

இந்நிலையில் கடந்த திங்களன்று அவரது வீட்டு வாசலில் வைத்தே பாண்டியன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த வனிதா மற்றும் கார்த்திகாவின் சகோதரர்களான கர்ணன்(38), பிரபாகரன்(34), கார்த்திகாவின் மகன் மனோஜ்குமார் (21), இவரது நண்பர்களான வீரபாண்டி (27), சிவக்குமார் என்ற டைகர் சிவா (44), வைரம்(20) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: நடுவழியில் நின்ற பேருந்தை தள்ளிய மாணவர்கள்
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வனிதா, அவரது கணவர் இராஜசேகர், கார்த்திகா ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள் மற்றும் கம்பிகள், இரண்டு இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பாண்டியன் மீது கொலை வழக்கு, வட்டிக்கு பணம் கொடுத்து மிரட்டல் விடுத்துள்ளது போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசொந்த மண்ணில் சாதனை படைக்குமா சூர்யா படை? இந்திய அணி ஓர் அலசல்
Next Article ராம் சரண் நடிக்கும் ’பெத்தி’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,991 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,991 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.