சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் வென்ற சிந்துவுக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
சாம்பியன் பட்டம்
கடைசி இரண்டு தொடர்களில் அரையிறுதியில் தோல்வியை தழுவினார் சிந்து. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதிப் போட்டியில் முதல் முறையாக சிங்கப்பூர் ஓபன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் சிந்து. இதில் அவர் ஆசியக் கோப்பை தங்கப்பதக்க வீராங்கனையான யீ ஷீ வாங் என்பவரை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘முதல் முறையாக சிங்கப்பூர் ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற சிந்துவுக்கு என் வாழ்த்துக்கள். சிந்து மீண்டும் தன் தனித்துவமான விளையாட்டுத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இது நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
I congratulate @Pvsindhu1 on winning her first ever Singapore Open title. She has yet again demonstrated her exceptional sporting talent and achieved success. It is a proud moment for the country and will also give inspiration to upcoming players. https://t.co/VS8sSU7xdn
— Narendra Modi (@narendramodi) July 17, 2022

