சீனாவில் கடும் வறட்சி காரணமாக தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகக் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடும் வறட்சி
சீனாவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த கோடை மழை பொழிவு குறைந்துள்ளது. இனால், நீா் நிலைகள் வறட்சியாக காணப்படுகின்றன. இதனால், நீா் மின்சாரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த ஏரிகளில் நீா்மட்டம் குறைந்த காரணத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மின்சாரத்தை சேமிக்கும் நடவடிக்கைகளில் சீன அரசு இறங்கியுள்ளது. அந்த வகையில் தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் மின்சாரத்தை ரேஷன் முறையில் பிரித்து வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுப்பாடு வரும் வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனா். இதற்கிடையே, பயிா்களைப் பாதுகாக்க செயற்கை மழையை உருவாக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

