டவிட்டர் பதிவு
2012-ல் வெளியான ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். அதில் அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘குக்கூ’, ‘கபாலி’, ‘காலா’, ‘பைரவா’, ‘வடசென்னை’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானார். இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘எங்கள் வீட்டின் முன் 2 அடி அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், எங்கள் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா’ என குறிப்பிட்டுள்ளார்.
2 feet of water in front of our home. Water entered our home 3 hours ago. Are you all safe ? #ChennaiRains pic.twitter.com/QstdGPilNK
— Santhosh Narayanan (@Music_Santhosh) November 12, 2022

