சென்னை போரூரில் காரில் சென்ற பெண்ணை வழிமறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
சென்னை, போரூரை அருகே உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியில் வசித்து வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் போரூர் சுங்கச்சாவடி அருகே டீக்கடை நடத்தி வந்தார். இவர் சொந்தமாக கார் ஒன்றும் வைத்திருந்தார். மேலும், ஓட்டுநர் ஒருவரை நியமித்து காரை கால் டாக்சியாகவும் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு ஐயப்பன்தாங்கல் கொளுத்துவாஞ்சேரி பகுதியில் இந்த காரானது நின்றுகொண்டிருந்தது. காரில் அந்த பெண்ணும் கார் ஓட்டுநரும் இருந்துள்ளனர். அப்பொழுது அங்கு கஞ்சா போதையில் வந்த நான்கு பேர் கத்தியை காட்டி கார் ஓட்டுநரை அடித்து விரட்டிவிட்டு அப்பெண்ணை அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து, மிரட்டி அவரிடம் இருந்த 8 சவரன் நகைகளைப் பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 நபர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

