சோழவரம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட 6 நபரை போலீசார் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் தொல்லை
சென்னை, பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே புதிய எருமை வெட்டிபாளையம் கிராமத்தில் செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல் சூளையில் பலர் வேலை செய்து வருகின்றனர். இங்கு புதுச்சேரியை சேர்ந்த 10 வயது சிறுமி பாம்பு கடித்து இறந்தார். இதனிடையே எருமை வெட்டிபாளைம் பகுதியை சேர்ந்தவர் முதியவர் பாலு (75). இந்த முதியவர் அந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொடுள்ளார். இந்நிலையில், அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக சதீஷ் (30), விஜயகுமார் (32), ரமேஷ் (30), கண்ணன் (30), பாஸ்கர் (24) மற்றும் முதியவர் பாலு உள்பட 6 நபரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

