Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»ஈரான் போர் பதற்றம்: ஓமன் சுல்தான், மலேசிய பிரதமர், பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி

ஈரான் போர் பதற்றம்: ஓமன் சுல்தான், மலேசிய பிரதமர், பிரான்ஸ் அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி

March 20, 20262 Mins Read16 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேற்காசியாவில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து ஓமன் சுல்தான், மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

குவைத், துபாய், கத்தார், சவூதி அரேபியா, அபுதாபி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள எல்பிஜி எரிவாயு ஆலைகள், கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலைகள், கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்டவற்றின் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. அத்துடன், கச்சா எண்ணெய் வயல்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பு, மேற்காசியாவில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 118 டாலராக உயர்ந்துள்ளது. ஈரானின் நடவடிக்கையால் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சூழலில், மேற்காசியாவில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் (Haitham bin Tariq), மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோருடன் இன்று (மார்ச் 19) தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, மேற்காசியாவில் நிலவும் சூழல் குறித்து தலைவர்களுடன் விவாதித்த பிரதமர் மோடி, மோதலைத் தணிப்பதற்கும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மீட்டெடுப்பதற்கும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதேபோல், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான முறையில் தடையற்ற கப்பல் போக்குவரத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க :  ZOHO இமெயிலுக்கு மாறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நன்றி தெரிவித்த ஸ்ரீதர் வேம்பு

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சகோதரர் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் உடன் தொலைபேசி வாயிலாகப் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டேன். ஓமன் மக்களுக்கு ஈகை திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் மோதலைத் தணிப்பதற்கும், அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்திய நாட்டினர் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாகத் தாயகத்திற்கு அனுப்பி வைத்த ஓமன் அரசுக்கு பாராட்டு தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  தர்மடம் தொகுதியில் பினராயி விஜயன் மீண்டும் போட்டி

அதேபோல், பிரதமர் நரேந்திர மோடியின் மற்றொரு பதிவில், “மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடனான உரையாடலின் போது மலேசியா மக்களுக்கு ஈகை திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். மேற்காசியாவில் நிலவும் கவலைக்குரிய நிலைமைக் குறித்து நாங்கள் விவாதித்தோம். பேச்சுவார்த்தையின் மூலம் மோதலைத் தணிக்க வேண்டும், அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெக்க வேண்டும் என்ற எங்களது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தையே பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் முன்வைத்தார்.

ஈரான் போர் தொடங்கியதில் இருந்தே பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சவூதி அரேபியா, ஜோர்டான், ஈரான் உள்ளிட்ட பல உலக நாடுகளின் தலைவர்களுடன் பேசியுள்ளார். இதனிடையே, மனிதாபிமான அடிப்படையில் ஈரானுக்கு இந்திய அரசு சார்பில் மருத்துவ உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகள்ளச்சந்தையில் சிலிண்டர்கள் பதுக்கினால் விளைவு மோசமாக இருக்கும் – கடும் எச்சரிக்கை விடுத்த பெட்ரோலிய அமைச்சகம்
Next Article எரிசக்தி தரவுகளை தேசிய பாதுகாப்பு விஷயமாக அறிவித்த மத்திய அரசு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.