காசா முனை பகுதியில் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடத்திக்கொண்டனர்.
ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீன நாட்டிற்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரிவு தொடர்பான போட்டி உள்ளது. கடந்த காலங்களில் இரு நாடுகளும் தாக்குதல் சம்பவங்களும் நடத்தியுள்ளது. இஸ்ரேலில் மேற்கு பகுதியை ஹமாஸ் அமைப்பு கைப்பற்றி ஆட்சி செய்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் அரசு பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது.இந்நிலையில், காசா முனை பகுதியில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியது. வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி உள்பட 10 பேர் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இந்த வான்வெளி தாக்குதலுக்கு பதில் தாக்குதல் கொடுக்கும் விதமாக காசா முனையில் இருந்து ஹமாஸ் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பால் ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேல் ஏவுகணை தடுப்பு அமைப்பால் நடுவானில் தடுத்து அழிக்கப்பட்டது. இந்த தாக்குதல் நள்ளிரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து ஹமாஸ் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. மீண்டும் இருநாட்டின் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

