இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மோடி சென்னை வருகை
அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையேயான மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. அதன்பெயரில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் 18 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டிருந்ததாக தெரிகிறது. இதனிடையே பிரதமரை சந்திக்க ஓ பன்னீர்செல்வமும் முயற்சித்தார் ஆனால் அதிமுக விவகாரத்தில் நரேந்திர மோடி பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் 28ம் தேதி நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வரும் பிரதமர் நரேந்திர மோடி ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

