நிச்சயமாக தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் வராதது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார்.
10 சதவிதத்தை தாண்டி உள்ளது
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து உள்ளது. சென்னை,கோவை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 சதவிதத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக மக்களிடையே மீண்டும் ஊரடங்கு வருமா என்ற குழப்பமும் அச்சமும் எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை சென்றுள்ளார். கோவையில் மதுக்கரை வட்டார பகுதியில் காசநோய் கண்காணிப்பு வருமுன் காப்போம் திட்டம், காசநோய் கண்காணிப்பு, நடமாடும் கதிர்வீச்சு வாகனம், துணை சுகாதார நிலையம் மற்றும் ஆர்டிபிசிஆர் புதிய எந்திரம் ஆகியவற்றை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ‘தமிழக முதலமைச்சர் காசநோய் குறித்து விழிப்புணர் ஏற்படுத்தும் விதத்தில் காசநோய் வாகனங்களைத் தொடங்கி வைத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக கோவையிலும் விழிப்புணர்வு வாகனம் தொடங்கப்பட்டள்ளது. ‘பார்வை திட்டம்’ மூலம் 1.15 லட்சம் பேர் இதுவரை பயன் பெற்றுள்ளனர்.
அச்சம்பட வேண்டாம்
தமிழக நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்காக மொத்தம் 136 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கோவை மாவட்டத்திற்கு 18 அறிவிப்புகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவச் சிகிச்சைக்கு 22 லட்சம் வரை அரசின் மூலம் பயன்பெறலாம். மேலும், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் ஆய்வு செய்யப்படும். தேவைபட்டால் மற்றொரு எம்ஆர்ஐ இயந்திரம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கொரோனவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது பரவி வரும் கொரோனா பிஏ4, பிஏ5 வகையே சேர்ந்த வைரஸ் தான் அதிகம். அதனால் மக்கள் பெரிய அளவில் அச்சப்பட வேண்டியதில்லை. இது வேகமாகப் பரவும் தன்மையுடையது என்ற பட்சத்திலும் அச்சம்பட வேண்டாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கட்டுப்பாடுகள் இல்லை
மேலும், கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமா என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘தமிழகத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் ஒரு இடத்தில் 40 பேருக்கு மேல் தொற்று பரவினால் மட்டும் சில கட்டுப்பாடுகள் வர வாய்ப்புள்ளது’ என அமைச்சர் மா. சுப்பிரமணியம்.

