நேபாளத்தில் மணமேடையில் வைத்து புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டுக்கொண்டனர்.
புதுமண தம்பதிகள்
நேபாளத்தில் பாரம்பரிய முறைப்படி திருமண உடையில் மணமகனும், மணமகளும் மேடையில் அமர்ந்துள்ளனர். பிறகு சில நிமிடங்களுக்குப் பின்பு, தம்பதிகள் ஒருவருக்கொருவர் உணவளிக்கும் சடங்கைத் தொடங்கியவுடன், அப்போது அவர்கள் இருவரும் உடல் ரீதியாக ஒருவரையொருவர் தள்ளுவதும் இழுப்பதும் நடந்துகொண்டனர். பின்னர் தொடர்ந்து ஒருவருக்கொருவர் தாக்கி சண்டையிட்டுக்கொண்டனர். சமூக வலைதளங்களில் வைரலாக இந்த வீடியோ பரவிவருகிறது. இந்த கட்சி பார்வையாளர்களிடம் கலவையான கருத்துக்களை பெற்று வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் மணமகனும், மணமகளும் தங்கள் திருமண விழாவில் மேடையில் வைத்து சண்டை போட்டுகொண்டது வேடிக்கையாக உள்ளது.