கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்
சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12 வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்துள்ளார். இதனை அடுத்து நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால் அந்த இடமே கலவரமாக மாறியது. இந்த சம்பவம் குறித்த வழக்கை காவல்துறையில் இருந்து மாற்றி சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீடியோ, கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றையும், போராட்டக்காரர்கள் விட்டுச்சென்ற வாகனங்களில் உள்ள பதிவெண் ஆகியவற்றை கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ விசாரணை நடத்தி வருகின்றனர்.

