திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல விரைவில் ‘கலைஞர் உணவகம்’ திறக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கலைஞர் உணவகம்
இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டார். உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்குவது, உணவு உற்பத்தி பல்வகைப்படுத்தல், பயிா் பல்வகைப்படுத்தல், ஒருங்கிணைந்த அன்னவித்ரான் தளம் 2.0, மற்றும் உணவுக் கிடங்குகளை சீா்திருத்துவது தொடர்பாக மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் ஆர்.சக்கரபாணி கூறியதாவது, உணவுத்துறைக்கான 2,000 கோடி ரூபாய் மானியத்தை விடுவிக்க மத்திய உணவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம். தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல பேரூராட்சி பகுதிகளில் விரைவில் ‘கலைஞர் உணவகம்’ திறக்கப்படும் . அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என தெரிவித்துள்ளார்.

