தூத்துக்குடியில் நெய்தல் கலை விழா தொடங்கி வைத்து ‘உணவும் கலைகளும்தான் நம் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகள்’ என நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பேசினார்.
நெய்தல் கலை விழா
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் பல தனியார் நிறுவனங்கள் இணைந்து தமிழகத்தின் தனித்துவம், பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் ‘நெய்தல் – தூத்துக்குடி கலை விழா’, என வ.உ.சிதம்பரனார் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை, வில்லிசை, சிலம்பாட்டம், ஆகிய 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
விழாவினை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார். அப்போது பேசியவர் ‘இந்த நெய்தல் விழா தூத்துக்குடியில் ஏன் நடத்தப்பட வேண்டும், ஏன் உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். மண் சார்ந்த கலை படைப்புகள், மக்களின் கலை வடிவங்கள் நம் வாழ்வின் பொக்கிஷங்கள். இவை நம் வாழ்வை விவரித்துக்கொள்கிறது. வேறு கலை வடிவங்கள் மதம் சார்ந்த, இறை சார்ந்தவற்றைப் பிரதிபலிக்கும் சூழலிலே நாட்டுப்புறக் கலை வடிவங்கள்தாம் நம் வாழ்வை பிரதிபலிக்கின்றன என தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் நெய்தல் கலை விழாவில் கூறியுள்ளார்.

