அதிமுகவின் கண்டன ஆர்பாட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி திடீரென்று மயக்கமடைந்தார்.
ஆர்பாட்டம்
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு அதிமுகவை அழிக்கும் வேலையை தான் பார்க்கிறது. அதிமுகவை கலைஞராலேயே அழிக்க முடியவில்லை, மு.க.ஸ்டாலினால் முடியுமா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
அதிமுகவின் மற்ற நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மேடையில் வெயிலில் நின்றுக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி திடீரென்று மயக்கமடைந்தார். பின்னர் அவருக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டு மேடையில் அமர வைக்கப்பட்டார்.

