ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் சேர நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆஸ்கார் விருது
உலக சினிமாவில் உயரிய விருதாக ஆஸ்கார் கருதப்படுகிறது. சினிமாவின் பல துறைகளில் பணியாற்றும் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆஸ்கார் போட்டியில் இடம்பெறுவதே சாதனையாக கருத்தப்படும் அளவுக்கு உலகப்புகழ் பெற்றது ஆஸ்கார் விருது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்களுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா
அந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து நடிகர் சூர்யாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள் ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட்டது. இதன்தொடர்ச்சியாக நடிகர் சூர்யா ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக சேர அழைக்கப்பட்டுள்ளார்.
It’s time to announce our new members! Meet the Class of 2022. https://t.co/BIpkeYpGPV
— The Academy (@TheAcademy) June 28, 2022
இவருடன் பிரபல ஹிந்தி நடிகை கஜோல் அவர்களும் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 4,000 பேர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஸ்டாலின் வாழ்த்து
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நடிகர் சூர்யாவை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, @TheAcademy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது பாராட்டுகள்!
வானமே எல்லை!
— M.K.Stalin (@mkstalin) June 29, 2022
தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சூர்யா அந்த குழுவில் இருந்தால், நடிகர் சூர்யா ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவின் நிரந்தர உறுப்பினராக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் பிரைட் ஆஃப் இந்தியன் சினிமா என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.

