முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பிரதமர் மோடி, மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் காமராஜரின் 120-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
காமராஜர் பிறந்தநாள்
முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பிரதமர் மோடி, ஓபிஎஸ், அன்புமணி ராமதாஸ், கமலஹாசன், சீமான் மற்றும் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தி செய்தி பதிவிட்டுள்ளார்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை #கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்!
போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! (1/2) pic.twitter.com/EMFTNUlPbI
— M.K.Stalin (@mkstalin) July 15, 2022
திரு காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர்.
— Narendra Modi (@narendramodi) July 15, 2022
மேலும், சென்னையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலையிட்டு மரியாத செலுத்திய ஓபிஎஸ்; “ இரு பிரதமர்களை உருவாக்கிய மாபெறும் தலைவர் காமராஜர். கல்விக்காக அவர் ஆற்றியபங்கு மிகப் பெரியது” என்று தெரிவித்துள்ளார்.

