முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்து கோவிலில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் பாஜக போராட்டம் நடத்தும் என பாஜக சஞ்சய் ஜெய்ஸ்வால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக சஞ்சய் ஜெய்ஸ்வால்
நேற்று முன்தினம் கயாவில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணுபாத் கோயிலில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தரிசனம் செய்தார். பீகார் அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உள்ளவர் முகமது இஸ்ரேல் மன்சூரி. இவருக்கு கயா மாவட்ட பொறுப்பு பதவியும் வழங்கப்பட்டு உள்ளது. அப்போது, அவருடன் இஸ்லாமியரான அமைச்சர் முகமது இஸ்ரேல் மன்சூரியும் தரிசனம் செய்ய சென்றார்.
இந்நிலையில், இதற்கு பீகார் பாஜக மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த கோயிலில் மாற்று மத நம்பிக்கை உடையவர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதலமைச்சர் நிதிஷ் இஸ்லாமிய அமைச்சரை அழைத்து சென்றுள்ளார். இதற்காக மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரால் மெக்காவில் கால் வைக்க முடியுமா? இந்துக்களை மட்டும் ஏன் எப்போதும் சகிப்புத்தன்மை என்ற பெயரில் தங்களின் மத உணர்வை மாற்றிக் கொள்ள வேண்டும் ? இதற்கு முதலமைச்சர் நிதிஷ் மன்னிப்பு கேட்க மறுத்தால், பாஜக போராட்டம் நடத்தும்’ என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

