கடன்தொல்லையால் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
புதுச்சேரி மாவட்டம் அரியாங்குப்பம் ஊரைச் சேர்ந்தவர் தியாகராஜன். 38 வயதான இவருக்கு பச்சைவாழி என்ற மனைவியும், லட்சுமி என்ற 6 வயது பெண் குழந்தையும், ஆகாஷ் என்ற 4 வயது ஆண் குழந்தையும் இருந்தனர். தியாகராஜன் ஆட்டோ டிரைவாக வேலை செய்து வந்தார். வறுமை காரணமாக பகுதி நேரமாக பெயிண்டிங் வேலையும் பார்த்து வந்துள்ளார். இதனிடையே கடந்த சில மாதங்களாகவே தியாகராஜன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு 18 லட்சம் ரூபாய் வரை கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பல்வேறு நெருக்கடிகள் வந்துள்ளது.
விசாரணை
இதனிடையே தியாகராஜன் நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் இதனையடுத்து தகவலறிந்த அரியாங்குப்பம் காவல்துறையினர் தியாகராஜன் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டில் தியாகராஜனின் மனைவி, குழந்தைகளும் இறந்து கிடந்தனர். இதன்பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தியாகராஜன் கடன் தொல்லையால் மனைவி, குழந்தைகள் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

