பொன்னியின் செல்வன்
கல்கியின் புகழ்பெற்ற நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்-1’ மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ட்விட்டர் பதிவு
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எம்ஜிஆர் நினைத்ததை மணிரத்னம் முடித்துள்ளார். விதைச்சது எம்ஜிஆர் விளைச்சது எம்ஆர். நமக்கது பெருமை’ என குறிப்பிட்டுள்ளார்.
Dropped project என்ற தலைப்பில் இன்று பார்த்தேன்.Actually HE just dropped a seed in (cine)field for this dream project!
பொன்மனச் செம்மலின்
பொன்னியின் செல்வன்’
எண்ணங்களில் உயர்ந்தவர்,என்றோ முதல்வராகி விட்டார் இக்காவியம் படைக்க.’நினைத்ததை முடிப்பவன்’-அவர் நினைத்ததை எல்லாம் pic.twitter.com/sxSO8LBwZO— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 4, 2022

