பிரபல நடிகர்
கடந்த 2017-ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதனைத்தொடர்ந்து அவர் அடுத்தடுத்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானர். இவர் தற்போது ‘நூறு கோடி வானவில்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ‘டீசல்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலயில், நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது டவிட்டர் பக்கதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘உங்கள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான என்னுடைய திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
With all my heart, for all my life ❤️
Im extremely happy to introduce 𝐍𝐚𝐫𝐦𝐚𝐝𝐚 𝐔𝐝𝐚𝐲𝐚𝐤𝐮𝐦𝐚𝐫, my wife-to-be. Love you to bits 🤗❤️
With God’s blessings, as we begin our forever, we seek double the love from you all, now & always pic.twitter.com/yNeHusULfY
— Harish Kalyan (@iamharishkalyan) October 5, 2022

