தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு
தென்காசி, பச்சேரி கிராமத்தில் 20ம் தேதி நடைபெற உள்ள ஒண்டிவீரன் 251வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1ம் தேதி நெற்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நடைபெறவுள்ளது. இவ்விழாக்களுக்கு தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இதில் கொரோனா தொற்று பரவ கூடும் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் 2ம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

