கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 19,893 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது அதன்பெயரில் தொற்றின் எண்ணிக்கை நேற்று 17 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது 6 மாநிலங்களில் 1,000-க்கும் அதிகமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 893 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 4,40,87,037 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 1,36,478 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 38,20,676 பேருக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்’ என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.

