சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு இயக்குனர் சுதா கொங்கரா நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேசிய விருது
கடந்த 2020ம் ஆண்டு வெளியான சூரரைப்போற்று திரைப்படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 68வது தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை, சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படக்குழுவினர், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சூரரைப்போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை
அந்த அறிக்கையில், ‘சூரரைப் போற்று படம் என் தந்தையின் மரணத்தில் இருந்து தொடங்கியது. நான் தேசிய விருது வென்றதை என் தந்தையால் காண முடியவில்லை. என் குரு மணிரத்னம் இல்லை என்றால் நான் வெறும் ஜீரோ தான். மணிரத்னம் சார் அவர்களுக்கு நன்றி, இந்த படத்தில் கோபிநாத்தாக வாழ்ந்த சூர்யாவுக்கும் நன்றி ‘ என்று சுதா கொங்கரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
For the loved ones on land and in the skies…heartfelt thanks.#SooraraiPottru @Suriya_offl @gvprakash @Aparnabala2 @rajsekarpandian @2D_ENTPVTLTD @nikethbommi @jacki_art @editorsuriya @PoornimaRamasw1 @deepakbhojraj @valentino_suren @gopiprasannaa pic.twitter.com/QPaI8A2n9l
— Sudha Kongara (@Sudha_Kongara) July 26, 2022

