இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரம் கொரோனா பாதிப்பு.
குறையும் கொரோனா
இந்தியாவில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இது தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிக்கை வெளியிட்டது. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவை பொறுத்தவரை 16,888 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. நேற்று 20,279 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று குறைவாக தொற்று பாதித்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,39,5989 இருந்தது தற்போது 4,37,10,027 ஆக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 16,118 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,32,28,350 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 41 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 5,25,604 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,24,073 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 202,17,66,615 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 18,92,969 கொரோனா தடுப்பூசி சேலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

