தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,093 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தினசரி கொரோனா பாதிப்பானது 20,000 நெருங்கியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று மட்டும் 20,975 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 2,093 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்மூலம் மொத்த பாதிப்பு 35,26,351 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வீடுகளில் தனிமைபடுத்தி கொண்டவர்களையும் சேர்த்து கொரோனா பாதித்து 16,504 பேர் சிகிச்சையில் பெற்றுவருகின்றனர். கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று 1,791 நபர்கள் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 516 பேருக்கும், திருவள்ளூரில் 104 பேருக்கும், செங்கல்பட்டில் 269 பேருக்கும், கோயம்புத்தூரில் 178 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

