தமிழகத்தில் குரூப் 4 போட்டித் தேர்வு வரும் 24ம் தேதி நடைபெரும் என தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
குரூப் 4 போட்டித் தேர்வு
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான பணியாளர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான பணியாளர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று காலை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

