உச்சநீதிமன்றத்தில் 48வது தலைமை நீதிபதியான என்.வி. ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
நீதிபதி ஓய்வு
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி பதவி ஏற்றார். இவரது பணிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனை தொடர்ந்து, புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஓய்வு பெறும் தலைமை நீதிபதி ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக யு.யு. லலித் நாளை பொறுப்பேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

