அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரவேற்புரை ஆற்றினார்.
பட்டமளிப்பு விழா
சென்னை கிண்டி அருகே அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கில் 42வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் எல்.முருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பிரதமர் மோடி, 69 மாணவர்களுக்கு தங்கபதக்கங்களை வழங்கினர். பின்னர் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசை வழங்கினார்.
அமைச்சர் பேச்சு
அதனைத்தொடர்ந்து வரவேற்புரை ஆற்றிய பொன்முடி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் 53 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்கின்றனர். இதில் ஆண்களை விட அதிகமான பெண்கள் உயர்கல்வி பயில்கின்றனர். மேலும், தமிழக கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பொன்முடி பேசினார்.
