Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற நபர்: புதுவையில் பயங்கரம்

காதலிக்க மறுத்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற நபர்: புதுவையில் பயங்கரம்

March 15, 20262 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை, இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிந்து கொலை செய்த சம்பவம் நடுநடுங்க வைத்துள்ளது.

புதுச்சேரி நேதாஜி நகரை சேர்ந்தவர் ஷர்மிளா(28). இவர் புதுவை அண்ணாசாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இந்திரா நகரை சேர்ந்த டிரைவர் ஜோசப்(36) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, சில மாதங்களாகவே ஜோசப் ஷர்மிளாவை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.

ஜோசப்பிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியிடம் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையே ஜோசப்பின் நடவடிக்கை ஷர்மிளாவுக்கு பிடிக்காத காரணத்தால், அவரிடம் பேசுவதை நிறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், ஷர்மிளாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில், தொடர்ந்து அப்பெண்ணுக்கு ஜோசப் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

மேலும், தன்னை காதலிக்குமாறு ஷர்மிளா செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று, தொந்தரவு கொடுத்து வந்துளார். இதனால் கோபமடைந்த ஷர்மிளா ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், ஜோசப்பை அழைத்த போலீசார், எச்சரித்து அனுப்பியுள்ளார்.

இதையும் படிக்க :  இஸ்ரேல் பெண் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை

தன் மீது புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த ஜோசப், நேற்று முன்தினம் (மார்ச் 13) இரவு வழக்கம்போல வேலை முடிந்து சென்று கொண்டிருந்த ஷர்மிளாவை பின் தொடர்ந்து சென்றுள்ளார். சுமார் 9 மணியளவில் உழவர்சந்தை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த ஷர்மிளாவை, தனது நண்பருடன் பைக்கில் சென்று வழிமறித்த ஜோசப், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.

அதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ஜோசப், ஏற்கனவே ஒரு பாட்டிலில் வாங்கி தயாராக வைத்திருந்த பெட்ரோலை சர்மிளா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், வலியில் அலறி துடித்த ஷர்மிளா 100 அடி தூரம் நெருப்புடன் ஓடியுள்ளார்.

அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக தீயை அணைத்தனர். பின்னர், படுகாயமடைந்த ஷர்மிளாவை மீட்ட அப்பகுதி மக்கள் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட ஷர்மிளாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதையும் படிக்க :  தன்னலம் அறியாத வெள்ளை மனம், பொதுநல வாழ்வின் இலக்கணம் பெருந்தலைவர் காமராஜர் - எடப்பாடி பழனிசாமி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, ஜோசப் ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் போது ஜோசப் கையிலும் தீக்காயம் ஏற்பட்டிருந்தது என்பதால், அவரை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து, ஷர்மிளா அளித்த புகாரின் அடிப்படையில், ஜோசப் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரித்து வந்தனர். இந்த நிலையில், 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஷர்மிளா, சுமார் 15 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு நேற்று (மார்ச் 14) காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதையடுத்து, கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசிபிஐ சம்மனால் செந்தில் பாலாஜி பதறுகிறார் – அண்ணாமலை விமர்சனம்
Next Article தனியார் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சைப் பெற்ற பெண் உயிரிழப்பு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.