சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்த பணம் குறித்த கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர்
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்த பணம் குறித்த மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்திய குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்த பணத்தின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை. இருப்பினும், 2020ம் ஆண்டை விட 2021ம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் நிதி உயர்ந்துள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் முதலீடு செய்ததாகக் கூறப்படும் பணம், கறுப்புப் பணம் என்று குறிப்பிடப்படவில்லை . கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 368 வழக்குகளில் ஆய்வு நடத்தப்பட்டு அந்த நபா்களிடம் இருந்து 14,820 கோடி ரூபாய் வரியாகக் வசூலிக்கப்பட்டுள்ளது’ என பதில் கூறியுள்ளார்.

