தூத்துக்குடியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மின்சார சட்டதிருத்த மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
நகல் எரிப்பு போராட்டம்
மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. ஆனால் மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி திருநெல்வேலி ரோட்டில் அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு எதிராகவும், விவசாயிகளை பாதிக்கும் இந்த மின்சார சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மின்சார சட்ட மசோதா நகலை எரித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.