சீர்காழியில் நெல் ஜெயராமன் நினைவாக பாரம்பரிய நெல் திருவிழா, இதில் 150 வகையான நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
நெல் திருவிழா
சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் நெல் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. இத்திருவிழா தொடர்ந்து மறைந்த நெல் ஜெயராமன் நினைவாக மாநில அளவிலான பாரம்பரிய நெல் திருவிழா நடத்தப்பட்டது. 8வது ஆண்டு விழாவாக சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நெல் விதைகள், காய்கறி விதைகள், சிறுதானியங்கள், இயற்கையான பழங்கள் பயன்படுத்தி ரசாயன கலப்படமற்ற ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டு வைத்திருந்தனர். மேலும், மூலிகைச் செடிகள், இயற்கை உரங்கள், இயற்கை மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. பாரம்பரிய அரிசி வகைகளை பயன்படுத்தி உணவுகள் தயாரித்து வழங்கப்பட்டன. இதில், நெல் திருவிழாவில் முன்னோடி இயற்கை விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் பங்கேற்றனர்.

