தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 22) 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 22) காரைக்கால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், தருமபுரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (ஜூலை 22)
தமிழ்நாட்டில் திருவள்ளூர், கூடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை (ஜூலை 23)
நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
25, 26ஆம் தேதி
அதேபோல் வருகின்ற 25, 26 ஆகிய தேதிகளில் திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கூடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

