தமிழ்நாடு

குரூப் 4 தேர்வு ; அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசந்திரன், குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். தேர்வில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு  200 கேள்விகள் கேட்கப்படும் எனவும், தேர்வுகள் ஜூலை 24 ஆம் தேதி காலை 9.30 முதல்  12.30 மணி வரை சுமார் 3 மணி நேரம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சுமார் 7,382 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இதில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பபடும்.  274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் இதில் அடங்கும். 90 மதிப்பெண்களுக்கு  மேல் பெறுபவர்களின்  தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும், அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசந்திரன்.

முன்னதாக, குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சியால் வெளியிடப்பட்டதும், அதற்கான முதன்மை தேர்வு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts