Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025
Facebook X (Twitter) Instagram
Saturday, November 8
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா திங்கட்கிழமை சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா திங்கட்கிழமை சூரசம்ஹாரம்

October 25, 20252 Mins Read341 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவில் 2ம் திருவிழாவில் இருந்து 5ம் திருவிழா வரை 4 நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை நடக்கிறது.

காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் தொடர்ந்து தீபாராதனையும் பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு வீரவாள் வகுப்பு பாடல்களுடன் மேளதாளம் முழங்க சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி – தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.

அங்கு சுவாமி அம்பாளுக்கு பால் தயிர் பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்காரமாகி தீபாராதனைக்குப் பின் சுவாமி அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

இதையும் படிக்க :  தமிழ்மொழி பாடத்தில் சென்டம் எடுத்த ஒரே மாணவி துர்கா !

6ம் திருவிழாவான நாளை மறுநாள் பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மகா தீபாராதனை நடக்கிறது.

மதியம் 2 மணிக்கு சுவாமியும் அம்பாளும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளு கிறார்.

அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது.

மாலை 4:30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார்.

அங்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கும் இடத்தில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள காட்சி.

சூரசம்ஹாரம் நடக்கும் கடற்கரையில் சுவாமி ஜெயந்தி நாதர் சூரபத்மனை வதம் செய்யும் வகையில் பக்தர்கள் இடையூறு இல்லாத வகையில் நடைபெறுவதற்கு நீண்ட தூரம் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் நான்கு கட்டங்களாக முதலில் யானை முகம் இரண்டாவது சிங்கமும் மூன்றாவது தன்முகம்(சூரன்), இறுதியில் சேவலாக மாறும் சூரனை வதம் செய்யும் வகையில் தனித்தனி கட்டங்களாக சுவாமி ஜெயந்தி நாதர் சூரனை சுற்றி வந்து வதம் செய்யும் வகையில் பக்தர்கள் இடையூறு இல்லாத வகையில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  நான் தான் CM 26 - நடிகர் பார்த்திபன்

தடுப்புகளுக்கு வெளியே இருந்து சுமார் 10 லட்சம் பக்தர்கள் சூரசம்ஹாரத்தை காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

7ம் திருவிழாவான 28ம் தேதி மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் மாலை மாற்று வைபவத்திற்கு புறப்படுகிறார்.

பின்னர் மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும் தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது.

விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை பக்தி சொற்பொழிவு நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன் இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Kandha sasti Surasamharam thiruchendhur thiruchendhur murugan kovil
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதஞ்சாவூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
Next Article எலி காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு தேங்கியுள்ள மழை நீரில் வெறும் காலில் நடக்க வேண்டாம்

Related Posts

Editor's Picks

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025
2026 தேர்தல்

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025
Editor's Picks

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,991 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,860 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,764 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20221,991 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,860 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,764 Views
Our Picks

மதுராந்தகம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தார் மரகதம் குமரவேல் MLA

November 7, 2025

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

November 7, 2025

மாணவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் – துணை ஜனாதிபதி C.P.ராதாகிருஷ்ணன்

November 7, 2025

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2025 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.