ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியானது புதிய வரலாறை படைத்திருந்தது. ஏனெனில் இந்த போட்டியின் முடிவை எட்ட இரண்டு சூப்பர் ஓவர்கள் தேவைப்பட்டன.
சர்வதேச கிரிக்கெட்டில் பலமுறை போட்டியின் வெற்றியை தீர்மானிக்க இரண்டு சூப்பர் ஓவர்கள் நடைபெற்றிருந்தாலும், டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சூப்பர் ஓவர்களை கொண்ட போட்டிகள் குறித்து விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு.
இதற்கு முன், கடந்த 2024ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் போட்டியின் முடிவை எட்ட இரண்டு சூப்பர் ஓவர்கள் தேவைப்பட்டன. ஏனெனில் அந்த இன்னிங்ஸில் இந்திய அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது. பின்னர் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணியும் 212 ரன்களை சேர்க்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றனர்.
சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 16 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், இந்திய அணியும் சூப்பர் ஓவரில் 15 ரன்களை எடுத்து போட்டியை சமன் செய்தது. இதனால் இரண்டாவது சூப்பர் ஓவர் கடைசி பிடிக்கப்பட்ட நிலையில், அதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 11 ரன்களை சேர்க்க, அடுத்து பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவியது.
கடந்தாண்டு நடைபெற்ற நேபாள் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியின் முடிவை எட்ட ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று சூப்பர் ஓவர்கள் தேவைப்பட்டது. இந்த போட்டியில் இரு அணிகளும் 152 ரன்களை எடுத்து ஆட்டத்தை சமன் செய்திருந்தன. பின்னர் நடைபெற்ற சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சமமான ஸ்கோரை எடுக்க, இரண்டாவது சூப்பர் ஓவர் நடைபெற்றது.
அதிலும் இரு அணியிம் ஒரே ஸ்கோரை எடுத்தனர். இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு போட்டியின் முடிவானது மூன்றாவது சூப்பர் ஓவருக்கு சென்றது. இறுதியில் மூன்றாவது சூப்பர் ஓவரில் நெதர்லாந்து அணியானது வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்கா vs ஆஃப்கானிஸ்தான் போட்டியும் இணைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 187 ரன்களை எடுத்தது. அதன்பின் இலக்கை விராட்டிய ஆஃப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் ஆல் அவுட்டான நிலையிலும் 187 ரன்களை சேர்த்து போட்டியை சமன் செய்தது.
இதனால் போட்டியின் முடிவை எட்டுவதற்கு சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 17 ரன்களை எடுத்தது. பின்னர் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியும் 17 ரன்களை எடுக்க, ஆட்டத்தின் முடிவு இரண்டாவது சூப்பர் ஓவருக்கு சென்றது.
இரண்டாவது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 23 ரன்களைச் சேர்த்த நிலையில், அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணியால் 19 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வென்றது.

