ராமேஸ்வரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் ஆண்டு முழுவதும் மழை நீர் தேங்கியிருப்பதால் பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதி உற்று வருகின்றனர்.
சுரங்கப்பாதையில் மழை நீர்
ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட அப்துல் கலாம் நினைவிடத்துக்கு அருகே தென்குடா கிராமம் உள்ளது. இந்த தென்குடாப் பகுதியில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. ராமேஸ்வரம் – ராமநாதபுரம் வரை செல்லும் அனைத்து ரயில்களும் இதன் கிராமம் வழியாக உள்ள தண்டவாள பாதையில் சென்று வருகின்றன. இந்த தண்டவாளத்தை கடந்து தான் கல்லூரி செல்லும் மாணவர்களும் மற்றும் பொதுமக்ககளும் கடந்து பயணித்து வருகின்றனர்.
அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்து இருக்கக்கூடிய வேளையில் சுரங்கப்பாதை அமைத்த பகுதியில் நீர் ஊற்று பெற்று நீர் வற்றாமல் இருந்து கொண்டே வருகிறது. இந்த பகுதி பொதுமக்கள் பலமுறை தொடர்ந்து கோரிக்கை வைத்ததை அடுத்து தங்கச்சிமடம் ஊராட்சி சார்பில் நீர் மோட்டார் வைத்து நீரை வெளியேற்றி வருகின்றனர். ஆனால் நீர் வற்றாமல் உற்றடுத்து கொண்டே இருக்கிறது. இங்கு நீர் தேங்குவதால் நீரில் பாசி படிந்து கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுரங்கப்பாதையை முற்றிலுமாக மூடிவிட்டு, அதற்கு பதிலாக மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

