Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 16
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»‘மகளிர் உரிமைத் தொகை ரூ.3,000’ – ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

‘மகளிர் உரிமைத் தொகை ரூ.3,000’ – ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

March 27, 20263 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக (ராமதாஸ் அணி) தேர்தல் அறிக்கையை நிறுவனர் ராமதாஸ் வெளியிட, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

“அனைவருக்கும் வளர்ச்சி கிட்டும். வளமான வலிமையான தமிழ்நாட்டை காண்போம்” என 101 பக்கங்களில் 74 தலைப்புகளில் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றின் முக்கிய அம்சங்கள்:

> வெளிப்படை தன்மையுடன் நேர்மையான நிர்வாகம் செயல்படும்.

> நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதியை கல்விக்கு ஒதுக்க வலியுறுத்தப்படும்.

> தனியார் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் பாட திட்டங்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பாடத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

> பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கப்படும்.

> 50 ஆயிரம் ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படுவர்.

> 10 ஆயிரம் பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

> மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும்.

> கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தப்படும்.

> இடைநிற்றலை தடுக்க பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை, மேல்நிலை மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்படும்.

> பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படும்.

> ஒரு தொகுதிக்கு ஒரு கலைக் கல்லூரி, ஒரு பாலிடெக்னிக், ஒரு ஐடிஐ தொடங்கப்படும்.

> கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.

> மாவட்டத்துக்கு ஒரு வேளாண்மை கல்லூரி தொடங்கப்படும்.

> தருமபுரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலியில் புதிய வேளாண் பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.

இதையும் படிக்க :  அன்புமணியை முதல்வர் ஆக்குபவன் தான் உண்மையான தொண்டன் - பாமக பொதுக்குழு தீர்மானம் !

> 4 இடங்களில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 10 புதிய சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும்.

> கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.

> தனியார் மருத்துவமனைகளில் புற்று நோய் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்க, தனி நிதியம் உருவாக்கப்படும்.

> வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை சந்தை துறைக்கு 3 அமைச்சகங்கள் உருவாக்கப்படும்.

> விளை பொருட்களை அரசே கொள்முதல் செய்ய ஆணையம் உருவாக்கப்படும்.

> ஒரு டன் கரும்புக்கு ரூ.4,500, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3 ஆயிரம் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.

> வேளாண் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகை, 60 வயது கடந்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

> வேளாண் பொருட்களை பாதுகாக்க 26 இடங்களில் சிறப்பு மண்டலம் அமைக்கப்படும்.

> கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்.

> புதுச்சேரியிலும் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

> நீர் மேலாண்மைக்கு பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

> சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இடஒதுக்கீடு வழங்கப்படும்.

> நீதித்துறையில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்படும்.

> பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

> தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

> முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக வழங்கப்படும்.

> 60 வயதை கடந்த முதியோருக்கு அரசு பேருந்து மற்றும் ரயில்களில் கட்டணமில்லா பயணம் செய்யலாம்.

> கூட்டுறவு வங்கிகள், பொதுத்துறை வங்கிகளில் நெசவாளர்கள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இதையும் படிக்க :  வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சசிகலா; விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிப்பு

> உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

> தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

> மாவட்டத்துக்கு ஒரு மகளிர் கல்லூரி, சென்னை, தருமபுரி, திருநெல்வேலியில் மகளிர் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்படும்.

> உள்ளாட்சியில் மகளிருக்கு 50 சதவீதம், காவல் துறையில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும்.

> தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.3 ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.

> கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலியில் மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்படும்.

> விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும். வழிபாட்டு தலங்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் மின் கட்டணம் வசூலிக்கப்படாது.

> மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படும்.

> தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

> இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். காவல் துறை, தீயணைப்புத் துறையில் 8 மணி நேரம் பணி என்பது கட்டாயமாக்கப்படும்.

> இலங்கை பிரச்சினைக்கு தீர்வு என்பது தனி தமிழ் ஈழம் அமைப்பது மட்டும் என்பதால், உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களது விருப்பப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

> கச்சத்தீவை மீட்டெடுக்க வலியுறுத்தப்படும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

> மதுரை, திருவண்ணாமலை, சேலம் உட்பட 9 மாவட்டங்கள் பிரிக்கப்படும்.

> புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article“சட்டப்பேரவைக்குள் இரட்டை இலக்கத்தில் பாஜக எம்எல்ஏக்கள் நுழைவர்” – வானதி சீனிவாசன் நம்பிக்கை
Next Article இன்றைய ராசிபலன் @ 27 மார்ச் 2026

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.