Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»மாம்பழ சின்னம் யாருக்கு? அன்புமணியின் மனுவுக்கு பதிலளிக்க ராமதாஸுக்கு உத்தரவு

மாம்பழ சின்னம் யாருக்கு? அன்புமணியின் மனுவுக்கு பதிலளிக்க ராமதாஸுக்கு உத்தரவு

March 10, 20262 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மாம்பழ சின்னம் தங்கள் தரப்புக்கு வழங்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்களுக்கு பதிலளித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாமக சின்னம், கொடி மற்றும் கட்சிப் பெயரை அன்புமணி பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உரிமையியல் 13- வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தர்மதுரை முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தரப்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கட்சி விதிகளின்படி பாமக நிறுவனருக்கு எந்த அதிகாரமும் இல்லை. வயது 87 மற்றும் மருத்துவக் காரணங்களால் எந்த முடிவையும் ராமதாஸால் சுயமாக எடுக்க முடிவதில்லை. சிலர் ஒன்றாகச் சேர்ந்து அவரை தவறாக வழி நடத்தி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

2022- ஆம் ஆண்டு முதல் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளேன். புதிதாக கட்சி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 29A(9) படி தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. அன்புமணி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் ராமதாஸ் தி.நகரில் உள்ள அலுவலகத்துக்கு பலமுறை வந்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வளர்ச்சியை சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய அன்புமணியின் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் அவருக்கு எதிராக செயல்படுகின்றனர்.

இதையும் படிக்க :  திராவிட மாடலுடன் மோதினால் உங்கள் மண்டை உடைக்கப்படும் - கி.வீரமணி பேச்சு !

நிறுவனர் ராமதாஸுக்கு நிர்வாகிகளை நியமிப்பது, நீக்குவது, ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நிர்வாக அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்கள் இல்லை என கட்சி விதி 13-ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து முடிவுகளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு மட்டுமே உச்ச அதிகாரம் உள்ளது என்றும் கட்சி விதி சொல்கிறது. விதிகளின் படி நிறுவனர் கட்சியின் எந்த பதவியையும் வகிக்க முடியாது. ஆலோசனைகளை மட்டுமே அவர் நிர்வாகிகளுக்கு வழங்க முடியும். அதிகாரம் இல்லாத நிறுவனரின் பெயரால் சட்டவிரோதமாக இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மூலமாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 31 ஆண்டுகளாக கட்சி விதிகளில் எந்த திருத்தமும் கொண்டு வரப்படவில்லை. கட்சி விதிகளின்படி இல்லாத சிறப்பு நிர்வாகக் குழு நிறுவனர் ராதமாஸை தலைவராக அங்கீகரித்ததாகவும், அன்புமணியை செயல் தலைவராக ஏற்பதாகவும் குறிப்பிட்டுள்ளது சட்டவிரோதமானது. 2025- ஆம் ஆண்டு மே 29- ஆம் தேதி முதல் ராமதாஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தனர். பொதுக்குழுவால் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். மாம்பழம் சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பொதுச் செயலாளரைச் சேர்க்காமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதே கோரிக்கையுடன் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், இந்த வழக்கையும் நிராகரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  மேகதாது விவகாரம் - அமைச்சர் துரைமுருகன் கடிதம் !

இதேபோல் அன்புமணி ராமதாஸ் தரப்பில், அதிகாரம் இல்லாத நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் எனக்கூறி மற்றொரு இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் நீதிபதி தர்மதுரை முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிறுவனர் ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கு விசாரணையை காலதாமதம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிப்புகள் வெளியிடுவதற்கு முன்பு எந்த உத்தரவும் பெறக்கூடாது என்ற நோக்கத்தில் தொடரப்பட்ட இந்த மனுக்களை நீதிமன்றம் ஏற்கக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்காத நீதிபதி, இந்த மனுக்களுக்கு ராமதாஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 11- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமாநிலங்களவைத் தேர்தல்: தம்பிதுரை, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு
Next Article ஊத்தங்கரை அருகே மூதாட்டி பாலியல் வன்கொடுமை! விவசாயி படுகொலை

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,496 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,496 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.