நிலவில் மனிதர்கள் 800 கோடி மனிதர்கள் 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
மனிதர்கள்
நிலவில் மனிதர்கள் வாழ ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்தவகையில், அங்கு 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. சந்திர மண்டலத்தின் மேற்பரப்பில் சிலிக்கா, அலுமினியம், மேக்னிஷியம் ஆக்சைடுகள், இரும்பு போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளது. இந்த தாதுக்கள் அனைத்தும் ஆக்சிஜனை உள்ளடக்கிய பொருள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ரிகோலித் எனப்படும் நிலவின் மேற்பரப்பில் 1.4 டன் கனிமங்கள் உள்ளது எனவும் இதில் 1 கன மீட்டருக்கு சுமார் 630 கி.மீ ஆக்சிஜன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நாசாவின் அறிவுரைப்படி ஒருவர் ஒரு நாளைக்கு சுவாசிக்க சுமார் 800 கிராம் ஆக்சிஜன் தேவை. அதன்படி பார்த்தால் நிலவில் உள்ள ஆக்சிஜன் மூலம் அங்கு மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு வாழலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு என கூறப்படுகிறது.

