கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலத்தை நாசா அனுப்பியது.
செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
இந்த விண்கலத்தின் ரோவர் கருவி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி, செவ்வாய் கிரகத்தில் ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்ததற்கான முக்கியமான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ‘பெர்சவரன்ஸ்’ ரோவர் சில பாறை மாதிரிகளை சேகரித்துள்ளது. இந்த பாறையானது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஜெசேரோ பள்ளத்தாக்கில் ஓடிய ஒரு மிகப்பெரிய ஆற்றின் அடிப்பகுதியில் இருந்துள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து நாசாவின் பொறுப்பு நிர்வாக தலைவர் ஷான் டப்பி கூறுகையில், “அதிபர் டிரம்ப்பின் முதல் பதவிக் காலத்தில் அனுப்பப்பட்ட ‘பெர்செவரன்ஸ்’விண்கலம் மூலம் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
நமக்கு கிடைத்த பாறை மாதிரியில் உள்ள ரசாயன சேர்மங்களை ஆய்வு செய்ததில், இது செவ்வாய் கிரகத்தில் நுண்ணியிர்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கியமான, புரட்சிகரமான ஆதாரமாம் என்பது உறுதி செய்யப்படுகிறது.
இது செவ்வாய் கிரகத்தைப் பற்றிய நமது புரிதலை மேலும் மேம்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்

