Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»திட்டமிட்டபடி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – உயர்நீதிமன்றம் உத்தரவு

திட்டமிட்டபடி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – உயர்நீதிமன்றம் உத்தரவு

February 13, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தலை திட்டமிட்டபடி வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கான நிர்வாகிகளின் பதவி காலம் நடப்பாண்டு (2026) மே மாதம் நிறைவடைகிறது. இதனையடுத்து 2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் எனவும், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க சட்ட விதிமுறைகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். மேலும் தேர்தலை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்கக் கோரி தயாரிப்பாளர் கவுன்சில் உறுப்பினர்களான சீனிவாசன், ரஞ்சித் குமார் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இதையும் படிக்க :  வைரலாகும் 'ஜெயிலர்' பட புகைப்படம்!

இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கத்தின் சட்ட விதிகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தயாரிப்பாளர் சங்கம் தரப்பில், சட்ட விதிகளை பின்பற்றியே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட மற்ற கூட்டங்களிலும் மனுதாரர்கள் கலந்து கொண்டனர். அப்போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத 5 பேர் கொண்ட உறுப்பினர்கள் குழு, உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். அதே நேரம் வழக்கு தாக்கல் செய்துள்ளவர்களில் நான்கு பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிக்க :  சினிமா தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.21.75 கோடி மோசடி; சென்னையில் இருவர் கைது

ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தியவர் என்ற முறையில், ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இம்முறையும் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தயாரிப்பாளர் கவுன்சில் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி பி. தனபால், தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடும் போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், தேர்தல் நடைமுறைகள் துவங்கிய பிறகு தடை விதிக்கக் கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், கடந்த தேர்தலின் போது தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், இம்முறையும் தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடைமுறை துவங்கியுள்ளது. இந்நிலையில், மற்றொரு தேர்தல் அதிகாரியை நியமிப்பது சரியாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவங்கதேசத்தில் மாபெரும் வெற்றியை பதிவு செய்த பிஎன்பி! பிரதமர் நாற்காலியில் அமர போகும் தாரிக் ரஹ்மான்
Next Article சேலம் விஜய் கூட்டத்தில் உடல்நிலை பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு: தவெக விளக்கம்

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.