மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட்
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 2000 வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியின் தொடக்க விழா வரும் 28ம் தேதி சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
விடுமுறை
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் இ.வ. வேலு, தொடக்க விழாவை சிறப்பாக நடத்திட வேண்டும் என்பதற்காக வரும் 28ம் தேதி சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது’ என்று கூறினார்.
