கோவை இருகூர் அருகே நேற்று இரவு காரில் இளம்பெண் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கடத்தப்பட்ட இளம் பெண் யார்? இளம் பெண்ணை கடத்தியது யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் கடத்தல் சம்பவம் தொடர்பாக, 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

